தாந்த்ரீக பரிகாரம்
அரச மரத்தை
சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு
தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால் பண புழக்கம் அதிகரிக்கும்.
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
செவ்வாயின்
பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர,
வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும்
திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த
மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க
விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து
எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
ஆரஞ்சு மரத்தில் வேறை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால்
படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக